Wednesday, February 24, 2010

பிரியமான தோழி......

நீ பூவாக இருப்பதை விட,
நிலவாகவே இரு !
நீ கனவாக இருப்பதை விட,
காவியமாகவே இரு !
நீ அலையாக இருப்பதை விட,
கடலாகவே இரு !
வானம் தந்த மழையா நீ ?
உன்னால் பூவெல்லாம் பூக்கின்றது !
வார்த்தை தந்த தேவதையா நீ ?
உன்னால் கவிதை வருகின்றது !
அதிசயம் உன்னால் சிற்பம் பேசுகின்றது !
உண்மைதான் உன்னால் ஓவியம் மிதக்கின்றது !
பேசும் கிளிகளுக்கு நடுவில்,
பாடும் பூ நீ !
ஆடும் மயில்களுக்கு நடுவில்,
அமைதி மொட்டு நீ !
உன்னை வாழ்த்திட வேறு மொழி இன்றி, என் தமிழே அழகு !
என் கவிதைகள் கற்ப்பனை அல்ல,
உன்னை கண் முன்னே நிறுத்தியே ஏழுதுகின்றேன் !
ஆயிரம் பெண்களுக்கு நடுவில், நீ ஒரு அற்ப்புத படைப்பு - உன்
அன்பால் நினைவில் வந்த வார்த்தை !
எங்கோ ! பிறந்த நான்,
உன்னைப்போன்ற நட்பை பெறுவது - என்றோ !
நான் செய்த புன்னியம் !
தீயில் முளைத்த தீபம் நீ !
பூவால் வந்த தென்றலும் நீ !
தங்கம் கூட உன்னை கண்டால்,
தள்ளிப்போகும் !
வைரம் கூட உன்னை கண்டால்,
உச்சிக்கொட்டும் !
மரகதமும் உனது காலடியில்.,
மலர்கள் தோட்டம் உன் பொற்பாதம் !
உனக்கு வாழ்த்து சொல்ல,
நான் மட்டுமே - நட்பு என்ற வரம் பெற்றேன்...!
***************************************************************
நட்புடன்...

No comments:

Post a Comment

 
படித்ததில் இரசித்தது - Free Blogger Templates, Free Wordpress Themes - by Templates para novo blogger HD TV Watch Shows Online. Unblock through myspace proxy unblock, Songs by Christian Guitar Chords