நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்
எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
என் துயரங்கள்
அனைத்தையும்
கனவுகள் சுமந்து வரும்
உன் கண்கள்
மறக்கடித்து விடும்
இந்தக் கல்லூரி
மதிற் சுவருக்குள்
பயங்களோடு வந்த
எனக்கு நம்பிக்கையின்
சிறகுகளைத் தந்தவள் நீ
நட்பின் கதவுகளை
திறந்து விட்டவள் நீ
ம்ம்ம்
வார்த்தைகளின்
வர்ணஜாலங்கள் மூலமாய்
நம் நட்பை
சொல்லி விடத்தான்
நினைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து
வலி மட்டுமே
மிஞ்சுகிறது....
Friday, February 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment