Thursday, March 25, 2010

அன்பின் அடையாளம்

எத்தனை நாட்கள் சந்தித்தோம்
என்பதைவிட ,
இனி, எப்போது சந்திப்போம்
என்றும் இதயம் தேடுகிறதே
அதுவே,
நம் அன்பின் அடையாளம்...

என் மரணம்


உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்...

நீ வேண்டும் தோழா

சூரியன் உதிக்க
வானம் வேண்டும்....
மரம் வளர
நிலம் வேண்டும்...
மீன் வாழ
தண்ணீர் வேண்டும்...
என் உயிர் வாழ
நீ வேண்டும் தோழா...

உன் நட்பு


வளர்வது தெரியாது
வளர்ந்ததும் தெரியாது
நகம் போன்றது...
திருப்பி கொடுத்து
தீர்த்து கொள்ளும்
கடனுமல்ல...

நட்பால்


ஆண்பால்,
பெண்பால்,
இரண்டும்
பொதுவானது
நட்பால்..
..

உயிர் உள்ளவரை


ஜீவன் உள்ளவரை மனிதன்..
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....

உன் நட்புடன் வாழ..


உயிருடன்
வாழ
ஒரு பிறவி
போதும்...
உன் நட்புடன்
வாழ
பல ஜென்மங்கள்
வேண்டும்...

உன் நினைவுகள்

நிலவு விண்ணில் இருந்தாலும்
அதன் வெளிச்சம் பூமியில் தான.
அது போல நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என் மனதில் தான்.

தொடரும் நம் நட்பு


அறிமுகம் இல்லாமல் வந்தோம்.....
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....

நட்பு கவிதை


உன் இதயமும் ...
என் இதயமும் ...
பேசிக் கொண்டிருந்தன
மௌன மொழியிலே...
அதனால் ...
இன்று நாம் நட்பு கவிதையானோம்...


---வாணிநாதன்...

விடியல்

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல
வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்க்காக.!!!


--கோகுல்

சூறாவளியின் பாடல்




பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்



--எம். ரிஷான் ஷெரீப்
 
படித்ததில் இரசித்தது - Free Blogger Templates, Free Wordpress Themes - by Templates para novo blogger HD TV Watch Shows Online. Unblock through myspace proxy unblock, Songs by Christian Guitar Chords